Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அரசு வேலை கொடுங்க…. அண்ணாமலை வலியுறுத்தல்…!!!!

விருதுநகரில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி நிகழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த 22 வயது இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று  நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளரிடம் பேசிய பாஜக தலைவர்  அண்ணாமலை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ,அந்த பெண்ணின் படிப்புக்கு தகுந்தாற்போல் அரசு வேலையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |