Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. பாதிரியார் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண்ணை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக பாதிரியாரின் மகன் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கலந்தபனை சீயோன்புரம் பகுதியில் டேவிட் ஜேக்கப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கலந்தபடை கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக இருக்கிறார். இவருக்கு அனிஸ் பவுல்(25) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 22 வயதுடைய இளம்பெண் கிறிஸ்தவ சபைக்கு சென்று வந்த போது அனிஸ் பவுலுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அனிஸ் பவுல் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு அனிஸ் பவுல் மறுப்பு தெரிவித்து அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதற்கு பாதிரியார் டேவிட் ஜேக்கப் ராஜ், தாயார் பிரின்ஸ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் அனிஸ் பவுல் அவரது தந்தை, தாய் ஆகிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |