Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 4ம் கட்ட கலந்தாய்வு”.. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!!

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நான்காம் கட்ட கலந்தாய்வு வருகின்ற ஒன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. அதனால் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாட பிரிவுகளில் நிரப்பப்படாமல் இருக்கின்ற இடங்கள் சுழற்சி வரிசையில் 289 மாணவர்களும் 44 மாணவிகளும் சேர்க்கப்பட இருக்கின்றார்கள். அதன்படி 274.9 முதல் 255 வரையிலான கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். மேலும் கலந்தாய்வு காலை 9.30 மணி அளவில் தொடங்குகின்றது. மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வந்து அவற்றை ஒப்படைத்து சரிபார்க்கப்பட்ட பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும் என கல்லூரி முதல்வர் மலர் கூறியுள்ளார்.

Categories

Tech |