Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இல்லற வாழ்க்கை தொடங்கி 2 மாதம்…. பெண்ணுக்கு நேர்ந்த துயரம்… அதிர்ச்சியில் தந்தை…!!

இல்லற வாழ்க்கையை தொடங்கிய இரண்டு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் கோபால் என்பவரின் மகள் ஷோபனா(21). இவருக்கும்  அதே ஊரை சேர்ந்த அஜித்குமாருக்கும் இரண்டு மாததிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அஜித்குமார் அங்குள்ள ஒரு கடையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடைக்கும், வீட்டிற்கும் கொஞ்சம் தூரம் என்பதால் அஜித் தன்னுடைய மனைவியுடன் அப்சர்வேட்டரி பகுதியில் வசித்து வந்தார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து நேற்று கணவன், மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த ஷோபனா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். ஷோபனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தனது மகள் இறந்துவிட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |