சாலை விபத்தில் புதுமண தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மங்களூரைச் சேர்ந்த புதுத்தம்பதிகளான ரயன்-ப்ரியா இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர்கள் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒன்றாக வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சம்பவத்தன்று ரயன்-ப்ரியா இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அச்சமயம் வேகமாக வந்த லாரி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனதின் மீது மோதியதில் இருவரும் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். இதனால் ப்ரியா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரயன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது இல்லற வாழ்க்கையை பல கனவுகளோடு வாழ ஆசைப்பட்ட ரயன்-ப்ரியா ஜோடிகள் கொஞ்ச காலம் கூட வாழ்க்கையை நடத்தாமல் இளம் வயதிலேயே இறந்துள்ள சம்பவம் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையே நீங்கா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.