Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு நிம்மதி….! சமையல் எண்ணெய் விலை குறைவு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர் உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைப் போலவே ஒரு கிலோ பாமாயில் 110 ரூபாயிலிருந்து 152 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 140 ரூபாயிலிருந்து 182 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ நல்லெண்ணெய் 240 ரூபாயிலிருந்து 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ டால்டா 120 ரூபாயில் இருந்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்த தடையை திங்கள்கிழமை முதல் நீக்குவதாக இந்தோனேஷிய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பாமாயில் விலை 50 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்ததை அடுத்து ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளது. சர்வதேச சந்தையில் விலை குறைய வாய்ப்பு உள்ளதால் சமையல் எண்ணெய் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |