2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சர்க்கரை ஆலை நவீனமயமாக்கலுக்காக ரூபாய் 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட் கோவிற்கு ரூ.157.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூபாய் 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூபாய் 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.