Categories
மாநில செய்திகள்

இலவச பயணத்தால் சிக்கல்…. அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை…. அரசு முடிவு எடுக்குமா…?

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது போன்ற பெண்களுக்கான திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது போன்ற இலவச பேருந்து திட்டத்தால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுவதாக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசு பேருந்துகளில் தங்களுக்கு கிடைக்கும் பேட்டா தொகை குறைந்துள்ளதாக ஓட்டுனர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த கட்டணமில்லா டிக்கெட் சலுகையுடன் இயங்கும் பேருந்துகளில் வசூல் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் வசூல் அடிப்படையில் கிடைக்கும் பேட்டா குறைந்துள்ளது. எனவே தாங்கள் பேட்டாவை அதிகரிக்க ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |