இலங்கை நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பும் , தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு இருக்கிறது. மேலும் எரிப்பொருள் பற்றாக்குறை, பல மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று தீவு முழுதும் இயல்புநிலை முடங்கி உள்ளது.
இதன் காரணமாக நாடு முழுதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 18 முதல் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுவதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்து இருக்கிறது.