இலங்கை நாட்டில் உள்ள மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதற்கு காரணமான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீது விசாரணையை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை மாதம் 28-ஆம் தேதி வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த தடை ஆகஸ்டு 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை வருகிற 11-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.