Categories
மாநில செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து….. ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை….. வெளியான தகவல்….!!!!

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களை ஆகஸ்ட் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்களும் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Categories

Tech |