இந்த வருடத்திற்கான புக்கர் பரிசை புனைக் கதைகான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக் வென்றுள்ளார். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமிக்க விருதாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு வருடம் தோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான புக்கர் பரிசுக்கு உலகம் முழுவதிலிருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட சூழலில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் எழுதிய நாவலுக்கு இந்த வருடத்திற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல் மேடா என்ற புனைக் கதைக்காக புக்கர் பரிசை வென்றிருக்கிறார். இந்த நாவல் விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவம் இடையே நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு துணை கதையாக எழுதப்பட்டிருக்கிறது. மேலும் லண்டனில் உள்ள பிரபல கச்சேரி அரங்கான ரவுண்ட் ஹவுஸில் புக்கர் பரிசு வழங்கும் விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸின் மனைவியும் ராணியும் ஆன காமிலா கலந்து கொண்டுள்ளார்.