கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு போன்ற பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் உணவு பற்றாகுறை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அன்னிய செலவாணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேலும் அங்கு உணவு பற்றாக்குறை மற்றும் மின்சாரம் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை நாட்டில் பல்வேறு இடங்களில் 13 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின் தடை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் வலுக்க தொடங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அதிபர் இல்லத்தை முற்றுகையிட மக்கள் கூட்டம் முயன்றதால் அதிபர் இல்லம் முன் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு,நுகேகொடை போன்ற பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை போலீசார் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர். மேலும் இந்த ஆதரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.