Categories
உலகசெய்திகள்

இலங்கையில் தொடரும் போராட்டம்….. நிதியமைச்சர் வீட்டிற்கு தீ வைப்பு…!!!!

இலங்கையில் தொடர்ந்து போராட்டம் வெடித்து வருகின்றது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீடுகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்துள்ளனர்.

நிலைமை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காவல்துறையினருக்கு உதவுவதற்கு ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |