இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி அதிகரிப்பை கண்டித்து நாடு முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்களும், எதிர்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே இருவரும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகின்றனர்.
அதேசமயம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் விதமாக சர்வதேச நாடுகள் மற்றும் உலக வங்கியிடம் இருந்து கடன் பெறும் முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ளும் இடைக்கால அரசு அமைக்க முடிவெடுத்துள்ளார். மேலும் நாளை இது தொடர்பாக நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.