தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ் அதிகாரியான இறைஅன்புவை தலைமைச் செயலாளராக நியமித்தார். இதன் தொடர்ச்சியாக அரசு பணிகள் அனைத்தும் முடிந்து விடப்பட்டன. இதனால் பல்வேறு தரப்பினரும் ஐஏஎஸ் அதிகாரியான இறையன்புவை தலைமை அதிகாரியாக நியமித்தற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அங்குள்ள தாமிரபரணி நதியில் குளித்துவிட்டு பெண்கள் உடை மாற்றுவதற்காக தனியாக உடை மாற்றும் அறை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறைகளில் கதவுகள் இல்லாமல் இருந்துள்ளது. இதனை கண்ட பக்தர் ஒருவர் புகைப்பட ஆதாரத்துடன் ஐஏஎஸ் அதிகாரி இறையன்புவிற்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார். இதனை பார்த்த இறையன்பு உடனடியாக மின்னல் வேகத்தில் அதாவது நான்கு மணி நேரத்திற்குள் கதவுகளை பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளார். சின்ன சின்ன புகார்களுக்கு கூட உடனடியாக நடவடிக்கை எடுத்த ஐஏஎஸ் அதிகாரி இறையன்புவிற்கு பக்தர்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.