மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சி கடைகள் மூடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெய் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சிக் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டும் மூடப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை இல்லை எனவும் அறிவித்துள்ளனர்.