Categories
உலக செய்திகள் கொரோனா

இறுதிக்கட்டத்தை எட்டிய தடுப்புமருந்து…. 30,000 பேருக்கு செலுத்தி சாதனை….!!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனா பாதிப்பிற்கு பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா தயாரித்த தடுப்பூசி நேற்று இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது.

சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி, ஆயிரத்துக்கும் மேலானோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். எனவே இந்த உயிர்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் பல நாடுகள் முதல் கட்ட வெற்றியை பெற்றுள்ளன. இதனால் இந்த தடுப்பூசி உருவாக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆனால் சீனா மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்றவை உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையை பெற்றுள்ளன.

பிரேசில் போன்ற அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இந்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதைப்போல அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பு மற்றும் மாடர்னா நிறுவனமும் சேர்ந்து உருவாக்கிய தடுப்பூசி ஏற்கனவே தொடக்ககட்ட சோதனைகளை முடித்த நிலையில். இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியுள்ளது. இதை ஆய்வு செய்யும் விதத்தில் அமெரிக்காவில் இருந்து 30 ஆயிரம் தன்னார்வலர்கள் இந்த தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டியுள்ளனர். இவர்களில் பாதி பேருக்கு உண்மையான மருந்தும், மீதமுள்ளவர்களுக்கு போலி மருந்தும் செலுத்தப்பட்டது.

இவர்கள் அனைவரையும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி பரிசோதனை நடத்துவது ஒரு முக்கியமான சாதனையாகும். முன்னதாக இந்த தடுப்பூசியை பல்வேறு இனத்தில் உள்ளவர்கள், பல்வேறு வயதினர் என  அமெரிக்காவினுடைய பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் மக்களிடம் செலுத்தி சோதனை செய்வது முக்கியமானது என மருத்துவர்கள் கூறியிருந்தனர். அந்தவகையில் தற்போது பல்வேறு பகுதிகளை சார்ந்த மக்களிடம் இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் தொடக்ககட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தடுப்பூசி பரிசோதனைக்கு சுமார் 1½ லட்சம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இந்த தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையை எட்டி இருந்த நிலையில், இது பாதுகாப்பானதா? என்பது இன்னும் உறுதிப்படவில்லை. இந்த தடுப்பூசியின் ஆரம்பகட்ட சோதனையில் பங்கேற்றவர்களுக்கு காய்ச்சல், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி போன்ற சிறு பக்க விளைவுகள் இருந்தன.

அதேசமயம் இந்த தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவை எதிர்த்து போட்டியிட இந்த நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசோதனை வெற்றி அடைந்தால் வர்த்தக ரீதியில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மாடர்னா நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |