விழுப்புரம் மேல்மலையனூர் சேர்ந்தவர்கள் பூங்காவனம் (95) , எல்லம்மாள் (83) தம்பதி. இவர்கள் சுமார் 60 வருடங்களாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மனைவி எல்லம்மாள் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட பூங்காவனம் அவருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, அவர் உயிர் விட்ட இடத்திற்குச் சென்று அமர்ந்துள்ளார். அதன் பிறகு அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதிகளை கண்டு பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories
இறப்பிலும் இணைப்பிரியா தம்பதிகள்…. உயிரே உனக்காக நான்….!!!
