ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரத்துக்கு உள்ளிட்ட பாளையம் கிராமத்தின் அருகில் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில் பெண் யானை ஒன்று படுத்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து மருத்துவக் குழுவினர் அங்கு சென்று யானைக்கு உணவளிக்க முயற்சி முயற்சி செய்தனர் ஆனால் அந்த யானை உணவு உட்கொள்ளாமல், படுத்தேதான் தான் கிடந்தது. அதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை யானை இறந்து விட்டது.
இதனையடுத்து கால்நடைத்துறை டாக்டர் சதாசிவ யானை உடற்கூறு பரிசோதனை செய்தார். அதன் பிறகு பேசிய அவர், இறந்த யானை 55 முதல் 60 வயது இருக்கும். எனவே வயது முதிர்வு காரணமாக யானை எழுந்திருக்க முடியாமல் படுத்தே கிடந்தது. சிகிச்சை பலனின்றி யானை இறந்தது. இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் யனைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.