Categories
தேசிய செய்திகள்

இறந்தவருக்கு 2 டோஸ் தடுப்பூசி….. “சர்டிபிகேட் பார்த்து ஷாக்கான மகன்”….. என்ன கொடுமை சார் இது….!!!!

பீகாரில் ஓராண்டுக்கு முன்பே இறந்த ஒருவருக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை அதிகாரிகள் அனுப்பியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம், ஆர்வால் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரமதார் மகதோ. இவர் கொரோனா இரண்டாவது அலை பரவி வந்தபோது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி உயிரிழந்தார். இவரின் மகன் அகிலேஷ் குமார் . அப்பகுதியில் வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரின் மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அகிலேஷின் தந்தைக்கு கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இறந்தவருக்கு எப்படி தடுப்பூசி போட முடியும் என்று ஆச்சரியப்பட்டனர் .இது குறித்து அகிலேஷ் கூறிய போது ‘கொரோனா தடுப்பூசியை சுகாதாரத்துறை அதிகாரிகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு வருடத்திற்கு முன்பே இறந்தவர் பெயருக்கு தடுப்பூசி போட்டதாக செய்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. பல கேள்விகளை எழுப்புகிறது. இது பற்றி மாவட்டம் மாஜிஸ்திரேடுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று அவர் தெரிவித்தார். மேலும் இதனை தீர விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |