Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவர்…. லாரியில் மோதி விபத்து…. ஒருவர் உயிரிழப்பு….!!

ஓட்டப்பிடாரம் அருகே நின்று கொண்டிருந்த  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்  ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

தூத்துக்குடி மாவடடம் ஓட்டப்பிடாரம் அருகே அமைந்துள்ள கீழசெய்தலை கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி ஆவார். இவருக்கு 27 வயதான மாரிமுத்து என்ற மகன் இருந்தார்.அவர்  அரசடியில் மோட்டார் மெக்கானிக் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். இந்நிலையில்  அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினரான சக்கையா என்பவரின் மகனான 25 வயது அருணும், மாரிகண்ணன் மகன் 21 அரசமுத்து ஆகிய மூவரும் மோட்டார்சைக்கிளில் கீழ் செய்தலை கிராமத்திலிருந்து மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறுக்குச் சோலைக்கு சென்றுகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மாரிமுத்து ஓட்டியுள்ளார்.

இவர்கள் சந்திரகிரி விலக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி உள்ளது. அதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அரசு முத்து ,அருண் ,ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் அருண் அரசு  ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாரிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.இந்த விபத்து குறித்து ஒட்டபிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |