பொதுவா ஜலதோசம் வந்தாலே சின்னவங்கலா இருக்கட்டும் பெரியவங்களா இருக்கட்டும் இம்சை தான்.அனால் இனிமே டென்ஷன் வேண்டாம்.
பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் இருமல் வந்துவிட்டால் பெரும் இம்சைதான். அதனுடன் பேசமுடியாத அளவுக்கு தொண்டை வலியும் சேர்ந்து கொள்ளும்.இவற்றிற்கு வீட்டில் இருக்கும் பொருளை வைத்து ஆன்டி பையோட்டிக் தயார் செய்ய முடியும் .அது பற்றிய தொகுப்பு .
அனைவர் வீட்டிலேயும் இருக்கக்கூடிய ஒரு பொருள் மஞ்சள் தூள். இது சிறந்த கிருமிநாசினினு அனைவரும் அறிந்தது. அதே போன்று மருத்துவ குணம் வாய்ந்த பொருள் மிளகு. இது தொண்டை புண், வயிற்றுபுண் எல்லாவற்றையும் குணப்படுத்தக்கூடிய ஒரு அபூர்வமான பொருள். அதுமட்டும்மின்றி பனங்கற்கண்டும் உடலுக்கு ரொம்ப நல்லது. இது மூன்றையும் சேர்த்து பாலில்போட்டு நன்றாக காய்ச்சி குடிக்கலாம்.அனால் இதை சுத்தமான பசும்பாலில் மட்டும் தான் வேலை செய்யும். இதனை தொண்டை புகைச்சலின் ஆரம்பத்திலேயே குடித்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும். இதனை காலை, மதியம் , இரவு என எப்போது குடித்தாலும் இருமல், ஜலதோஷம், தொண்டைவலி போன்ற பிரச்சனைகள் வராது .