Categories
தேசிய செய்திகள்

“இருதரப்பு சண்டையில் இப்போது எல்லாம் தொலைந்து போனது”…? ஏக்நாத் காட்சே பேச்சு…!!!!!

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா மூத்த தலைவர் ஏக் நாத் ஷின்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கியுள்ளார். சிவசேனாவின் மொத்தம் 55 எம்எல்ஏக்களில் 40 பேருடன் பா ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல் மந்திரி ஆகியுள்ளார் ஏக்நாத். இதனை தொடர்ந்து  ஏக்நாத் தரப்பு சிவசேனாவை உரிமை கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை வில் அம்பு சின்னம் தொடர்பான ஏக் நாத் தரப்பின் கடிதத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க தடை விதிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே திறப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பான மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் உத்தவ் தாக்கரே தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்து சிவ சேனா கட்சி சின்னத்தை உரிமை கோரி ஏகுநாத் சண்டே தாக்கல் செய்த கடிதத்தை பரிசீலனை செய்து முடிவு எடுக்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். இதன்படி தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, அந்தேறி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ தாக்கரே தலைமையிலான அணியும் முதல் மந்திரி ஏக்நாத் தலைமையிலான அணியும் கட்சியின் பெயரையோ அல்லது வில் அம்பு சின்னத்தையோ பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.

இந்த நிலையில் பால் தாக்கரே சம்பாதித்த சின்னத்தை சண்டையில்  மகன் அரசியல் சண்டையில் சில நிமிடங்களில் இழந்து விடுகிறார். பால் தாக்கரேவின் கடின உழைப்பின் காரணமாக வில் மற்றும் அம்பு பின்னம் மிகவும் பிரபலம் அடைந்தது. ஆனால் அவர் சின்னத்துடன் ஆட்சிக்கு வந்தார் இருப்பினும் இரு தரப்பு சண்டையில் இப்போது எல்லாம் தொலைந்து விட்டது. சின்னத்தின் விளைவாக தேர்தல் சின்னம் முடக்கப்பட்டிருக்கிறது இது மிகவும் துரதிஷ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |