Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. மதுரையில் பரபரப்பு…!!

இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள நல்லூர் என்னும் பகுதியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அழகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூவாள் என்பவருடன் ஒரு வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மண்டேலா நகரில் உள்ள ரிங்ரோடு பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் நிலைதடுமாறிய அழகர் கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த அரசு பேருந்து அவர் மீது ஏறி இறங்கியதால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டி உட்பட சக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான அழகரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |