Categories
தேசிய செய்திகள்

இரவு 8 மணி – காலை 7 மணி வரை…. மீறினால் ரூ.1000 அபராதம்…. கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நடமாட கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட கூடாது மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திலும் சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |