Categories
மாநில செய்திகள்

இரவு பணிபுரியும் டிராபிக் Sl-க்களுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

சென்னையில் 104 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் இருக்கின்றன. அதில் பணிபுரிந்து வரும் ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் இரவில் ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு இரவு பணி முடிந்து மறுநாள் காலை 6:00 மணிக்கு வீட்டிற்குச் செல்லும் ஆய்வாளர்கள், மதியம் மீண்டும் பணிக்கு திரும்புவது வழக்கம் ஆகும்.

இதன் காரணமாக இரவு பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர்களும், உதவி கமிஷனர்களும் பல உடல் நிலை பாதிப்பிற்கு ஆளாகினர். இவர்களின் நலனை கருத்தில் கொண்ட சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர், “இரவு பணி செய்யும் அதிகாரிகளுக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு காவல் துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |