தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள்?
பொதுப் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50% பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் தடை?
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. பிளே ஸ்கூல், எல்கேஜி, யுகேஜி ஆகிய நர்சரி பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளுக்கு செல்லும் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.