கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தின் St.Gallen மாநிலத்தில் உள்ள Linsebuhi என்ற மாவட்டத்தில் இரவு நேரம் சுமார் 9 மணி அளவில் உரத்த இடி முழக்கம் போன்ற விசித்திரமான சத்தம் ஒன்று கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் புத்தாண்டுக்காக வாங்கிய பட்டாசுகளை தான் யாரோ கொளுத்திருக்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கருதி இருக்கின்றனர். ஆனால் பட்டாசு கொளுத்தும் போது ஏற்படும் வெளிச்சம் எதுவும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே அங்குள்ள மக்கள் அது பலூன் வெடிக்கும் சத்தமாகவோ அல்லது துப்பாக்கி வெடிக்கும் சத்தமாகவோ இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்நிலையில் St.Fiden ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று நள்ளிரவில் 33 மற்றும் 44 வயது சுவிஸ் நபர்கள் இருவர், 19 வயது ஜெர்மன் இளைஞர் உட்பட மூவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணையின் அடிப்படையில் அவர்களை கைது செய்துள்ளனர். இருப்பினும் கைதான அந்த மூவருக்கும் Linsebuhi மாவட்ட மக்கள் கேட்கும் விசித்திர சத்தத்திற்கும் தொடர்பு உள்ளதா ? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.