Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில்…. அடித்து விட்டு நிற்காமல் சென்ற கார்…. பரிதாபமாக இறந்த காவலாளி..!!

இரவில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சேர்க்காடு ரோட்டிலுள்ள, இந்திராநகர் பகுதியில் 45 வயதான செந்தில் வசித்து வந்துள்ளார். இவர் ஓரகடம் அடுத்த குன்னவாக்கம் ஜங்ஷன் அருகிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு வேலைக்காக பஸ்ஸில் சென்ற அவர் குன்னவாக்கம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளர். இதைத்தொடர்ந்து வண்டலூர், வாலாஜாபாத் சாலை சாலையை கடக்க முயன்ற போது அங்கு சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதியுள்ளது.

இதனால் பலத்த காயமடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  காவல்துறையினர் விரைந்து சென்றனர். மேலும் செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.

Categories

Tech |