கர்நாடகா மாநிலம் பெங்களூர் சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க சென்றபோது விபத்தில் சிக்கியினார்கள். அதாவது போலீசார் சென்ற கார் சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்ததால் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். இது சக போலீஸ்காரர்கள் மத்தியில் பீகாரில் பீதியை ஏற்படுத்தியது. அதனைப் போல பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுதும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்கவும் வழக்குகள் குறித்து விசாரணைக்காகவும் போலீசார் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் போது விபத்தில் காயம் அடைவது, உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றவாளிகளை பிடிக்கவோ வழக்கு விசாரணை மேற்கொள்வதற்கோ வாகனங்களில் பயணம் செய்வதற்கு சி.ஐ.டி. போலீஸ்சாருக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6:00 மணி வரை பணி நிமித்தமாக சி.ஐ.டி. போலிஸ் பிரிவில் பணியாற்றும் போலிசார் வாகனங்களில் துரத்தியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதித்து சிஐடி போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதனைப் போல மற்ற பிரிவுகள் பணியாற்றும் போலீசார் இரவு நேர பயணம் செய்ய தடை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.