பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வாழக்குழி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சித்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி சித்ரா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சித்ராவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.