பசுவையும் இரண்டு கன்றுகளையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி கிராமத்தில் பாப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாப்பா வளர்த்து வந்த மாடு நேற்று முன்தினம் இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இந்த செய்தி கிராம மக்களிடையே வேகமாக பரவியது. இதனை அறிந்த பொதுமக்கள் இரண்டு கன்று குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.