Categories
தேசிய செய்திகள்

இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவான முகேஷ் அம்பானி…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!!!!

நம் நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு சென்ற 2018ம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனந்த் பிரமல் என்ற தொழிலதிபரை இஷா அம்பானி திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு மகன் -மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இதையடுத்து குழந்தைகளுக்கு ஆதியா மற்றும் கிருஷ்னா என பெயர் சூட்டியிருப்பதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அம்பானி குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது மகள் இஷா- ஆனந்த் தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆதியா என்ற பெண் குழந்தையும், கிருஷ்ணா என்ற ஆண் குழந்தையும் பிறந்து இருக்கிறார்கள். தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தாத்தா ஆகியிருக்கும் முகேஷ் அம்பானி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்.

Categories

Tech |