Categories
தேசிய செய்திகள்

“இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு”…. கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ்…..!!!!!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் போன்று இயற்கை எரிவாயுவின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த அடிப்படையில் அழுத்தப்பட்டஇயற்கை எரிவாயுவின் விலையானது நேற்றைய தினமும் கிலோ ஒன்றிற்கு ரூபாய்.2.50 உயர்ந்தது. இதற்கு மத்திய அரசை, காங்கிரஸ் கட்சியானது கடுமையாக சாடியிருக்கிறது. இது எரிப்பொருள் கொள்ளை என்று வர்ணித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்திதொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தன் ட்விட்டர் தளத்தில், “மோடி அரசின் எரிப்பொருள் கொள்ளை திட்டத்தால் பணவீக்கம் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இன்று, (நேற்று) சி.என்.ஜி. விலையானது மேலும் ரூபாய் 2.50 அதிகரித்து இருக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் அவர் விலைவாசி உயர்வில் எத்தனை சாதனைதான் படைக்கப்படும்..? இன்னும் எத்தனை பேரழிவை ஏற்படுத்தும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |