இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. அதில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஷங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு தனி நீதிபதி முன்பு வழக்கை முடித்த பிறகு மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கலாம் என தெரிவித்து. இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் லைக்கா நிறுவனம் சார்பாக இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ் ராமன் இதனை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நீதிபதி இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி பானுமதி நடுவராக நியமித்து உத்தரவிட்டுள்ளது