Categories
மாநில செய்திகள்

இயக்குனர் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு… சென்னையில் பதற்றம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

இயக்குனர் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், உச்சப் பத்திரிக்கை போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. இவர் நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர் ஆவர். இவரது வீடு விருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது.

பெப்சி திரைப்பட இயக்கத்தின் தலைவராக இருந்தவர் இதனை அடுத்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக இருக்கின்றார். இந்த சூழலில் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் பற்றி விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |