இம்ரான்கான் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஊடகப்பிரிவு நிா்வாகிகளில் ஒருவரான அா்ஸ்லான் காலித் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சென்ற 2018ஆம் வருடம் நாடாளுமன்றத் தோ்தலின் போது இம்ரான்கானுக்காக பிரசாரம் மேற்கொண்ட சமூக ஊடகப் பிரிவின் நிா்வாகியாக அா்ஸ்லான் காலித் இருந்தாா்.
லாகூரிலுள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அவரது குடும்பத்தினரின் கைப்பேசிகளை எடுத்துச் சென்று விட்டதாக தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து மத்திய விசாரணை முகமை விசாரிக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சா் ஆசாத் உமா் கூறியதாவது, காலித்தின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. நாட்டுப் பற்று மிக்க அா்ஸ்லான், நாட்டின் சொத்து என்று கூறியுள்ளார்.