ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து கன்னட பிரதமர் பாடல் பாடும் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவால் கடந்த எட்டாம் தேதி மரணம் அடைந்துள்ளார். அவரது இறுதி சடங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இதில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றுள்ளார். இந்த சூழலில் ராணியின் இறுதி சடங்குக்கு முன்பாக கன்னட பிரதமர் லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் இசை கலைஞர்களுடன் சேர்ந்து பியானோ வாசித்தபடி மகிழ்ச்சியாக பாடல் பாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பதிலாக பரவி வருகின்றது.
இதனால் ஜஸ்டின் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். கனடா நாட்டினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ஜஸ்டினை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். அதில் ஒருவர் ராணியின் மறைவிற்கான துக்கத்தில் கனடாவை பிரதிநிதிப்படுத்துவதும் பிரதம ஜஸ்டின் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது அவமானம் என தெரிவித்துள்ளார். அதேநேரம் இது ஒரு சாதாரண விஷயம் என வேண்டுமென்றே பெரிது படுத்தப்பட்டதாகவும் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு ஆதரவாக சிலர் பேசி வருகின்றார்கள்.