Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்படி பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை”…. கோப்ரா பட இயக்குனர் பற்றி ஆவேசமாக பேசிய கூல் சுரேஷ்….!!!!!!

கோப்ரா திரைப்பட இயக்குனர் பற்றி ஆவேசமாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார்.

இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31 வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் விக்ரம் ஒவ்வொரு வேடங்களிலும் மிரட்டி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

இத்திரைப்படம் விக்ரம் ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு பொதுவான ரசிகர்களை கவரவில்லை. இதனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதே பொதுவான விமர்சனமாக இருக்கின்றது. இந்நிலையில் கோப்ரா பட இயக்குனர் குறித்து நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

அவர் கூறியிருப்பதாவது, கோப்ரா திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து டிமான்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரின் முதல் திரைப்படத்தில் என்னை போல தமிழ் நடிகர்களை தான் பயன்படுத்தினார். இத்திரைப்படம் ஹிட்டான பிறகு அடுத்த திரைப்படத்தில் இந்தி நடிகர்களை பயன்படுத்தினார். தற்பொழுது கோப்ரா திரைப்படத்தில் தமிழ் நடிகர்களை விட ஆங்கில நடிகர்கள் மற்றும் இந்தி நடிகர்களை தான் அதிகமாக நடிக்க வைக்கின்றார். ஹிந்தி நடிகர்களுக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு வழங்கினால் என்னை போன்ற நடிகர்கள் எங்கு சென்று நடிப்பது? உங்களை ஹிந்தி நடிகர்களை பயன்படுத்த வேண்டாம் என சொல்லவில்லை. தமிழ் நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று தான் சொல்வதாக ஆவேசமாக பேசி உள்ளார்.

 

Categories

Tech |