Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணலாமா…? துணி எடுக்க தானே போனீங்க… வசமாக சிக்கிய மாமியார் மருமகள்…!!

துணி எடுக்க சென்ற இடத்தில் மாமியார்-மருமகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஞானசௌந்தரி. இவர் தன்னுடைய மருமகள் மதிவதனி என்பவருடன் சேர்ந்து சிதம்பரத்தில் துணி எடுப்பதற்காக ஜவுளி கடைக்கு சென்றனர். அங்கு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கவனிக்காத இவர்கள் சேலைகள் மற்றும் நைட்டிகளை திருடினர்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த கடையின் உரிமையாளர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்ததோடு  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |