சோமாலியாவில் பருவமழை சரியாக செய்யாத காரணத்தினால் ஏற்பட்ட வறட்சியால் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 35,00,000 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சென்ற ஆண்டு சோமாலியாவில் பருவமழை பெய்யாத காரணத்தினால் கடும் வறட்சி நிலவுவதால் சோமாலிய மக்கள் தொகையில் 30% பேருக்கு அன்றாட உணவு கூட அடுத்த ஆண்டு மே மாதத்தில் கிடைப்பது சந்தேகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு பற்றாக்குறையால் அவசர நிலையை பிரகடனப்படுத்திய சோமாலியா அரசு உலக நாடுகளிடம் உதவிகளை கேட்டுள்ளது.