தலீபான்கள் பெண்களுக்கு கசையடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் அவர்கள் தினந்தோறும் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பெண் சுதந்திரம், கல்வி, ஆடை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறையிலும் பெண்கள் மீது தலீபான் அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மத சட்டங்களை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர். இந்த சட்டங்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனைகள் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று டுவிட்டர் பக்கத்தில் திருட்டு, பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 12 பேருக்கு ஆலம் நகரில் உள்ள மைதானத்தில் தண்டனை அளிக்கப்படுவதாகவும், அதனை பார்க்க ஆண்கள் அனைவரும் வரவேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை பார்ப்பதற்காக மைதானத்தில் நூற்றுக்கணக்கில் ஆண்கள் குவிந்தனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 12 பேருக்கும் 21 முதல் 31 கசையடிகளை தண்டனையாக தலீபான்கள் வழங்கினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.