Categories
தேசிய செய்திகள்

இப்படியும் ஒரு கொடூரமா….பெண் குழந்தை பிறந்ததால்….. பயங்கர சம்பவம்…!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் பப்லு ஜாலா,லட்சுமி (வயது 22) என்ற தம்பதியர். இவர்களுக்கு   திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பப்லுவுக்கும், குடும்பத்தினருக்கும் பெண் குழந்தை பிறந்தது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தனது மனைவியை  கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தாக்கியுள்ளது  தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொடூர தாக்குதலில் லட்சுமியின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கொடூரத்தின் உச்சகட்டமாக பப்லு மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து லட்சுமியின் உடலில் இரும்பு கம்பியை வைத்து சூடு போட்டுள்ளனர் .

இந்நிலையில் லட்சுமியின் உறவினருக்கு இது குறித்து தெரிய வரவே, அவரை மீட்ட உறவினர்கள், இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |