உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொழில்துறை அமைச்சர் நந்த்கோபால் குப்தா நந்தி, அந்த மாநில அரசியலில் புதிய ஷோ மேனாக உலா வர ஆரம்பித்துள்ளார். அதிலும் இவரது ஸ்டைல் படுவித்தியாசமாக இருக்கிறது. இந்நிலையில் வழக்கமாக மக்களைக் கவரும் விதமாக, ஏதாவது செய்வது அரசியல்வாதிகளின் வழக்கமாக உள்ளது. இதையடுத்து அமைச்சர் நந்தகோபால் எங்காவது சுற்றுப்பயணம் சென்றால், கட்சித் தொண்டர்களின் வீடுகளில், இரவு தங்கி விட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து அங்கேயே குளிக்கிறார். அதன் பின் டீ மற்றும் டிபனை முடித்து விட்டுக் கிளம்புகிறார்.
இதையடுத்து அமைச்சரின் இந்த வித்தியாசமான அப்ரோச் உ.பி. அரசியலில் பெரும் அளவில் பேசப்படுகிறது. மேலும் அவர் குளிக்கும் வீடியோக்களும் வைரலாக பரவியுள்ளன. ஷாஜகான் பூர் மாவட்டத்திற்கு விசிட் அடித்த அமைச்சர் நந்தி அங்கு ஒரு தொண்டரின் வீட்டில் தங்கி, அதன் பின் அவர் குளித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இவ்வாறு ஒரு வீடியோவில் அடி குழாயில் தண்ணீர் பிடித்தும் மற்றும் பாத்ரூம் தரையில் நன்றாக உட்கார்ந்து கொண்டும் குளிக்கிறார். இந்நிலையில் அமைச்சர் தனது வீடு போலவே இயல்பாக இதையெல்லாம் செய்து வருகிறார். இதையடுத்து அமைச்சர் நந்தி எழுதியுள்ள இன்னொரு டிவீட்டில், யோகி அரசு மற்றும் முந்தைய அரசுகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்றும் மேலும் இங்கு சாதாரண மனிதர்களுக்கும், யோகி அரசுக்கும் எந்த ஒரு வித்தியாசமே கிடையாது.
இந்நிலையில் கடந்த வாரம் இதே போல பரேலி மாவட்டத்திற்குச் சென்ற நந்தி , பரதுல் என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரு தொண்டர் வீட்டில் போய்த் தங்கி குளித்து விட்டு வந்தார். அமைச்சர் மிகவும் எளிமையாக இருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர். பலரது பாராட்டுக்களையும் அமைச்சர் குவித்து வரும் நிலையில், பாஜகவுக்கு இது நல்ல பெயரை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டிலும் இப்படித்தான் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அரசியல்வாதிகள், வேட்பாளர்களை மிரள வைத்ததோடு, ரோட்டுக் கடைகளுக்கு விசிட் அடித்து இட்லி ஊற்றுவது, தோசை வார்ப்பது, பரோட்டா போடுவது மற்றும் டீ போடுவது என ஒரு கை பார்த்தது குறிப்பிடத்தக்கது.