Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. வலியில் துடிதுடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பரணிதரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கோல்டு வின் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பரணிதரன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார்..

இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக பரணிதரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |