Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்துவிட்டு எரிந்த வாகனம் …. நள்ளிரவில் நடந்த சம்பவம் …. போலீஸ் விசாரணை ….!!

நள்ளிரவில்  சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பாண்டீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை சோலைக்குமார் என்பவர் பணியை முடித்து விட்டு வாகனம் நிறுத்தும்   இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு  சென்றுள்ளார்.இந்நிலையில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம்   தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சரக்கு வாகனம் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரக்கு  வாகனத்தில் எப்படி தீப்பற்றியது என்பது குறித்து   தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |