தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மாநகர பேருந்துகளில் முகக்கவசம் அணிந்து பயணிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பொழுது பொதுமக்கள் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து.