தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். எஞ்சிய மவ்வட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று முதல் 50 சதவீதம் பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரித்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். ஜூன் 30 வரை நீதிமன்றப் பணிகள் ஆன்லைனில் தொடரும். இன்று முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.