சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் பிற்பகலில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் அடுத்த ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதால் கேரளா தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.